இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு..!
நெய்வேலி அடுத்த வள்ளுவர் கிராமத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தார். வேல்முருகன் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்கள் மீது மோதி கவிழ்ந்துள்ளது.
பலத்த காயம் அடைந்த மாணவி சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






