ஏழுமலையான் கோயில் அருகே கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமியை சிசிடிவி பதிவுகளை கொண்டு சில மணி நேரத்தில் போலீசார் மீட்டதோடு குழந்தையை கடத்தி சென்ற பெண்ணையும் கைது செய்தனர்.
கோயில் அருகே கையில் கட்டும் கயிறு விற்பனை செய்து வந்தவரின் குழந்தையை பெண் ஒருவர் பேருந்தில் கடத்தி செல்வதை போலீசார் கண்டுபிடித்து தீவிர விசாரணைக்கு பிறகு மீட்டனர்.






