தமிழக மீனவர்களுக்கு அபராதம்: வைகோ கண்டனம்
எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கை அரசின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது மீனவ சமூகத்தை கொந்தளிக்க செய்திருக்கிறது. இலங்கை அரசின் இத்தகைய மீனவர்கள் விரோத செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.






