தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்
செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக் கொண்டு அவர்களை பணி நிலைப்பு அல்லது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், சமூகநீதி என்பதற்கான பொருள் தி.மு.க. அரசுக்கு தெரியாது என்பதால்தான் அதனை செய்யாமல் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது.
இப்போதாவது உழைப்பு சுரண்டலையும், சமூக அநீதியையும் ஒப்புக்கொண்டு, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.






