கோயில் பணத்தில் கல்லூரிகள்? – இபிஎஸ் பேச்சுக்கு விளக்கம்
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார்.
படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா என்றே இபிஎஸ் பேசியதாக ADMK IT Wing விளக்கமளித்துள்ளது.





