கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு..!
கன்னியாகுமரி மாவட்டம் தூதூர் அருகே கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. கோடை காலங்களில் காற்றின் வெப்பம் அதிகம் இருக்கும்போது நீரை மேகம் உறிஞ்சும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில் தூத்தூர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிகழ்வை அந்தப் பகுதி மீனவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். மேலும் இதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.





