5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.





