யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன்..!
கோவையில் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த டிடிஎப் வாசன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
போலீசாரால் தேடப்பட்ட டிடிஎப் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு சரணடைந்தார். இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
விதிக்கு புறம்பாக இருசக்கர வாகனத்தின் 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த டிடிஎப் வாசன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் மாலை விடுவிக்கப்பட்டார்.






