தேர்தலில் போட்டியிட விருப்ப மனு – அ.தி.மு.க சார்பில் இறுதிக்கட்ட நேர்காணல்
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 5வது கட்டமாக இன்று நேர்காணல் நடத்த உள்ளார். இந்த நேர்காணல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் காலையிலும், பிற்பகலில், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் 10175 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.






