‘தேசியத் தலைவர்’ படத்தை பார்ப்பதற்கு முன்பே முறையீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல – ஐகோர்ட்
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே முறையீடு செய்வது ஏற்கத்தக்கதல்ல; சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. தயாரிப்பாளரின் பதிலை கருத்தி கொள்ள வேண்டி உள்ளது.
சாதிய பிரச்னைகளைத் தூண்டும் வகையிலான காட்சிகளை நீக்கவும் அதுவரை தேசிய தலைவர் படத்தை திரையிட தடை விதிக்கவும் கோரிய மனு குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தணிக்கை வாரியம் படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.






