மூன்று வயது குழந்தை மர்ம காய்ச்சலால் பலி..!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மூன்று வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த தேவதர்ஷினி என்ற குழந்தை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார். மர்ம காய்ச்சலுக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இந்த விவகாரத்தை அறிந்த சுகாதாரத் துறை கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.






