திருப்பூர் மக்களுக்கு ரூ.1 கோடியில் புதிய சுற்றுலா தளம்..!
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளமாக பெரிதாக எதுவும் இல்லை.
இந்நிலையில் மாநகர பகுதியிலுள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.இதில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.






