திடீரென பேருந்தில் பாய்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்..!
கடலூர் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அங்கு வந்த பேருந்திற்கு அடியில் திடீரென போய் விழுந்தார். இதில் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடந்த சில மாதங்களாக பேருந்து நிலையத்தில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த அந்த நபர் பேருந்தில் பாயும் காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.






