வெள்ளத்தை கடந்து கடமையாற்றிய சுகாதார பணியாளர்!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில், வெள்ளம் சூழ்ந்த ஆற்றை கடந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதார பணியாளர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சாலைகள்மூடப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே பாறைகளில் குதித்து வெள்ளத்தை கடந்து சென்றார்.






