உதட்டில் முத்தமிடுவது உடலைத் தீண்டுவது குற்றமல்ல எனக்கூறும் நீதிமன்றம்..!
உதட்டில் முத்தமிடுவதும் உடலை தீண்டுவதும் இயற்கையான ஒன்று. அது குற்றமல்ல எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வழக்குகளிலும், பசுமாட்டு வழக்குகளிலும், அறிவுக்கும், அறிவியலுக்கும், சட்டத்திற்கும் பொருந்தாத பல்வேறு அறிவுரைகளை வழங்குவது வடநாட்டு நீதிமன்றங்கள். அந்த வகையில் உதட்டில் முத்தமிடுவது உடலை தீண்டுவது இயற்கையான ஒன்று. அது குற்றமாகக் கருதப்படவில்லை எனக்கூறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.





