தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த கார்..!
நீலகிரி அருகே தேயிலை தோட்டத்தில் 200 மீட்டர் தூரம் பறந்து வந்து விழுந்த காரால் அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தேயிலை பகுதியில் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலை செய்து வந்தனர்.
பயங்கர சத்தத்துடன் ஒரு மீட்டர் தூரத்திற்கு சென்று பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்ததால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அந்த பகுதியில் நாகார்ஜுனா நடிக்கும் தெலுங்கு படத்தின் ஷூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும், அந்த படத்தில் காட்சிக்காக இந்த காட்சி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தேயிலை தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.






