வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்கினார் முதல்வர்..!
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ரவி. வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பேரிடர் காலத்தில் கீழ்ப்பாக்கம் வளாகத்தில் மயங்கி கிடந்த உதயகுமாரை தோளில் சுமந்து மீட்டது, வீட்டிற்குள் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மூன்று மணி நேரத்திற்குள் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்தது ஆகிய நற்செயல்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.






