பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!
பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி வளர்ச்சிக்காக பேசியுள்ளார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதி அளித்ததுடன் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மக்களின் நலன் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமருக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.







