மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் 3 வது அலை தொடக்கமா..?
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரொனா பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு இரண்டு மாதங்களுக்கு பிறகு சரிந்துள்ளது.
பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது. ஆனால் கேரளாவில், மகாராஷ்டிராவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணிக்கை கூடவும் இல்லை குறையவும் இல்லை.






