ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த பெண்..!
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்திருந்தார்.
அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தால் கடந்த 7ஆம் தேதி பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நேற்று8 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.







