கார், பைக் ஏசி ஸ்மார்ட்போன்கள் பொருட்களின் விலை உயர்வு..!
ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கார், பைக் ஏசி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை 3 அல்லது 4 ஆயிரம் ரூபாய் வரை உயருகிறது. உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்து இருப்பதால் விலை உயர இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஏப்ரல் மாதம் தொடங்கியதும் பல பொருட்களின் விலை உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விமான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. பால் போன்ற அத்யாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மின் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது.






