கருணாநிதியை போலவே நானும் முதலமைச்சர் ஆகியுள்ளேன் : எடப்பாடி பழனிசாமி
அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வர் ஆனதைப் போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பரப்புரை மேற்கொண்டார்.
தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்ச ர்முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.






