முதன் முறையாக அமெரிக்காவில் ஒன்பது மனித குரங்குகளுக்கு கொரொனா தடுப்பூசி..!
உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் ஒன்பது மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சான்டியாகோ ஊரில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் வாழும் கொரில்லாக்கள் சிலவற்றுக்கு கடந்த ஜனவரி மாதம் கொரொனா கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து குரங்குகளுக்கு கொரொனா பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் கால்நடை மருந்து நிறுவனம் தயாரித்த பிரத்தியேக தடுப்பூசி மிருகக்காட்சி சாலையில் உள்ள மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே நாய், பூனைகளுக்கு செலுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







