சென்னையில் 10 லட்சம் கொரொனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது..!
சென்னையில் 10 லட்சம் கொரொனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 30 சதவிதம் நிறைவடைந்துள்ளதாகவும் தடுப்பூசி போட கூடுதல் மையங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.







