கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை முதலில் அறிய வேண்டும்..!
கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவாமல் இருக்க அது எங்கிருந்து தோன்றியது என்ற மூலத்தை அறிவது முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரொனா பரவாமல் தடுப்பது தான் முக்கியம் என்றும் பழி சுமத்தும் அரசியல் தேவையற்றது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரொனா குறித்த ஆய்வை உகானில் இருந்து தொடங்கி இருப்பதாகவும் அதற்கு வேறு இடங்களில் தோன்றுவதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.






