சரளமாக தமிழ் பேசும் போலந்து இளைஞர்..! காந்தி நினைவு மண்டபத்திற்கு வருகை புரிந்தார்..!
கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்திற்கு வருகை புரிந்த போலந்து நாட்டு இளைஞர் சரளமாக தமிழில் பேசி அசத்தினார். போலந்து நாட்டைச் சேர்ந்த ஓய்தேக் என்பவர் தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் கோவை வந்து தமிழ் பயின்று தற்போது தமிழில் சரளமாக பேசவும் எழுதவும் சேர்ந்துள்ளார்.
தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் இன்று தனது நண்பர்களுடன் காந்தி மண்டபத்திற்கு வந்து காந்தியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். சங்க இலக்கியமும் திருக்குறளும் தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.







