ஏழை எளியோருக்கு உணவு 20 லட்சம் பேருக்கு வழங்க திட்டம்!
பசியில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பதற்காக ஏழை, எளியோருக்கு உணவு என்னும் முயற்சியை துவங்கி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர் வீடின்றி சாலையோரம் தங்கியிருக்கும் ஒரு சிலருக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்தாலும் சமைக்க வழியின்றி தவிப்பதாக கூறியுள்ளார். அதனால் 25 நகரங்களில் பசியில் இருக்கும் 20 லட்சம் பேருக்கு உணவளிக்க ஏழை, எளியோருக்கு உணவு என்னும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.







