ரொம்ப அத்தியாவசியம்னா மட்டுமே வெளியே போங்க
கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலில் சமூகங்களின் முக்கியத்துவம் குறித்து நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரொனா வைரஸ் நாம் நினைத்ததை விட மிக வேகமாக பரவுகிறது எனவும், நாம் பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம், புயல், ஜல்லிக்கட்டு என சாலையில் இறங்கி போராடிய நாம் இனி வீட்டிலிருந்தே போராட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பேருந்து, ரயிலில் பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் கூட மிக மிக அத்தியாவசியமான செல்களுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டுமெனவும் கொரொனா பாதிக்கப்பட்ட நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பொதுவெளியில் சென்றால் அது மற்றவர்களுக்கு ஆபத்தாகிவிடும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறியுள்ளார்.







