குடியரசு தின விழாவையொட்டி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை
ஜனவரி 26 நாளை நடக்கவிருக்கும் குடியரசு தினவிழாவையொட்டி முக்கிய ரயில் நிலையங்கள் ஆகிய சென்னை சென்ட்ரல், காட்பாடி ,சேலம் ரயில் நிலையம், ஈரோடு ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.எந்த அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இந்த சோதனை நடைபெற்று வருகிறது.






