‘அயன்’ படபாணியில் தலைப்பாகையில் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
இதேபோல் இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






