அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு: இ.டி மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சொத்துக்கு குவிப்பு வழக்கு விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.





