தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத ஆளுநர்: மாணிக்கம் தாகூர் கண்டனம்..!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்காமல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு தொடர்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது ‘X’ தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகளின் முடிவை வரவேற்ற அவர், ஆளுநர் தனது நடைமுறையை உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.






