தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற அடைப்பு
கோழித் தீவனக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இந்தக் காலவரையற்ற போராட்டத்தின் காரணமாக ஜூலை 31 முதல் கோழி இறைச்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும், இரு மாநிலங்களிலும் சுமார் 70,000 கடைகள் அடைக்கப்படும் என்றும் கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






