ராமேஸ்வரம் அக்னி தீர்த்த பகுதியில் திடீரென சுமார் 200 அடிக்கு உள்வாங்கிய கடல்..!
புனிதத்தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் இன்று திடீரென கடல் நீர் சுமார் 200 அடி வரை உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் உள்வாங்கியதன் காரணமாக அடியில் இருந்த பாறைகளும், மணல் பரப்பும் வெளியில் தெரிவதால், அங்கு புனித நீராட வந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து அச்சத்துடனேயே நீராடி வருகின்றனர்.






