தேசிய அளவில் த.வெ.க – தி.மு.க. இணைய வேண்டும் – திருமாவளவன்
அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தி.மு.க தனது செயல்பாட்டின் மூலம் விசிக கூட்டணியில் இல்லை என்பதை உணர்த்திவிட்டது என, முன்னாள் வி.சி.க சட்டமன்ற உறுப்பினரை தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு முன்னர் நான் கூறினேன். திமுகவுடன் எந்த பகையும் எங்களுக்கு இல்லை.
தேசிய அளவில் இருந்து அந்தக் கருத்தை நான் தெரிவித்தேன். எனது தனிப்பட்ட பாதிப்பையோ, தமிழ்நாடு, வி.சி.க, தி.மு.க ஆகியவற்றை மட்டும் தனியாக மனதில் வைத்து பேசவில்லை. தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு அணியை அமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும், தவெகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது பார்வை.
இதனை தமிழ்நாடு அரசியல்வாதிகளால், ஊடகவியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனைச் சொல்லும்போது, ‘இவர் என்ன குழப்புகிறார்’ என பேசுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.





