போர் நிறுத்தம் வேண்டி ப.சிதம்பரம் வேண்டுகோள்: புனித வெள்ளியன்று உலக அமைதிக்கான அழைப்பு
போர் முடிவுக்கு வர வேண்டும்” என்ற வலியுறுத்தலுடன், முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரும், மேலும் ரஷ்யா உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட போரும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக குட் பிரைடே நாளையொட்டி, உலக அமைதி நிலைக்க வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




