கேரளாவில் அரசின் கொள்கைகள் அடங்கிய பத்திகளை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநர்
தமிழ்நாட்டில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறிய பரபரப்பான சூழலில், கேரள சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரையின் போது அரசின் கொள்கைகள் அடங்கிய பத்திகளை வாசிக்காமல் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தவிர்த்துள்ளார்.
இருப்பினும், மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஆளுநர் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று கேரள முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.






