மெட்ரோ ரயிலில் திடீர் சோதனை- உயர்நீதிமன்றம் உத்தரவு
மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்துத் திடீர் சோதனைகளை நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.






