காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதன் தீவிரத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






