தரமற்ற விதைகளை விற்பதைக் கட்டுப்படுத்த புதிய மசோதா..!
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், புதிய விதை மசோதா, 2025-ன் வரைவை வியாழக்கிழமை வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன், பொதுமக்களின் கருத்துகளைக் கோரியுள்ளது.
கட்டாயப் பதிவு: அனைத்து விதைகளையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று வரைவு மசோதா முன்மொழிகிறது. இது சட்டமாக இயற்றப்பட்டால், தற்போதுள்ள 1966-ம் ஆண்டின் விதைச் சட்டத்தை மாறும்.
பதிவு விதிகள்: வரைவு மசோதா பிரிவு 13-ன்படி, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, “விவசாயிகளின் வகைகள் மற்றும் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்படும் வகைகளைத் தவிர, வேறு எந்த வகை விதைகளையும், பயிரிடும் நோக்கத்திற்காக, பதிவு செய்யாமல் விற்பனை செய்யக் கூடாது.”
தண்டனை பிரிவுகள்: வரைவு மசோதாவில் கடுமையான தண்டனை விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. குற்றங்கள் சாதாரண (Trivial), சிறிய (Minor), மற்றும் பெரிய (Major) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பெரிய குற்றங்களுக்கான தண்டனை: “போலியான விதைகளை” (Spurious Seeds) வழங்குதல், பதிவு செய்யப்படாத வகைகளின் விதைகளை வழங்குதல், மற்றும் “விதை விற்பனையாளர் அல்லது விநியோகஸ்தராகப் பதிவு செய்யாமல் வணிகம் செய்தல்” போன்ற பெரிய குற்றங்களுக்காக, அதிகபட்ச அபராதமாக ரூ.30 லட்சம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.
இந்த மசோதா, விற்பனை மற்றும் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் தரத்தைக் கட்டுப்படுத்தவும், தரமான விதைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்கவும் முயல்கிறது.
தற்போதுள்ள சட்டத்தில் விதைகளைப் பதிவு செய்யக் கட்டாய விதி இல்லை. 1966-ம் ஆண்டுச் சட்டத்தின் பிரிவு 5-இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஏற்கனவே உள்ள வகைகள், புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
இந்த வரைவு மசோதா குறித்துப் பொதுமக்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு டிசம்பர் 11 வரை அமைச்சகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் 2004 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் விதை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன, ஆனால் அவை சட்டமாக இயற்றப்படவில்லை.






