உத்தரப் பிரதேசத்தில் ரெட் அலர்ட்..!
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே குண்டுவெடிப்பை அடுத்து உத்தரப் பிரதேசம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய உத்தரப் பிரதேச சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ், பதட்டமான மத இடங்கள், பதட்டமான மாவட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் டிஜிபி அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.






