மணிப்பூரில் மீண்டும் கற்களை வீசி தாக்குதல்
மணிப்பூரில் PM மோடியின் கட் அவுட்டுகளை சேதப்படுத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாதுகாப்பு படை மீது கற்களை வீசி இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர்.
மணிப்பூரின் சூரசந்த்பூரில் பாதுகாப்புப் படையுடன் இளைஞர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு நிலவியது. இதனால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அதன் பின் நிலைமை சீரானதாகவும் போலீசார் விளக்கமளித்தனர்.






