கோவில்பட்டி: போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சண்முகையா (வயது 36) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகையாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதமும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.





