இவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை உண்டு..!
மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவியாக இல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத் தலைவி இல்லாத வீடுகளில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விவாகரத்து பெற்று தனியாக இருப்பவர்களும் ரேஷன் கார்டு இருந்தால் விண்ணபிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க பணிகள் ஜூலை 15-ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.





