தமிழக காவல்துறை : கனிமொழி பாராட்டு
காவல்துறை விசாரித்த அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாள்களில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம் என கனிமொழி தெரிவித்துள்ளார். CBI கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? என கேட்கும் அளவுக்கு காவல்துறை சிறப்பாக வழக்கை நடத்தி, குற்றத்தை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
CBI விசாரித்த பொள்ளாச்சி வழக்கு ஆறரை ஆண்டுகள் நடைபெற்றதாகவும் கனிமொழி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.






