மாநில அரசே வன்முறையை தூண்டுகிறது: ஓவைசி காட்டம்
மகாராஷ்டிராவில் அரசே வன்முறையை தூண்டுகிறது என AIMIM தலைவர் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொடுக்கும் அறிக்கைகள், அவர்களது பேச்சுகளே வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றன என்றும், தங்களுடைய பொறுப்புகளை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார். நாக்பூர் வன்முறை, மகாராஷ்டிர அரசின் மிகப்பெரிய தோல்வி என்றும் ஓவைசி விமர்சித்துள்ளார்.






