மகா கும்பமேளாவில் அக்சய் குமார்
மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு, இந்தி நடிகர் அக்சய் குமார் புனித நீராடினார். அதைத் தொடர்ந்து பேட்டியளித்த அவர், பிரயாக்ராஜில், இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளை செய்ததற்காக, CM யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தார்.
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சி, நாளை மறுநாளுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.





