ரயில் ஓட்டுநருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ..!
திருப்பதியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் ஓட்டுனருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து ஓட்டுனர் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்ததால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு கோ பைலட் வரவழைக்கப்பட்டு 45 நிமிடங்களுக்கு பிறகு அந்த ரயிலை சென்னைக்கு இயக்கினார்.






