கல்லூரி மாணவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல்..6 மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
கோவையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ள அறை விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் ஒரு கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா பொட்டலம் வைத்திருந்த ஆறு மாணவர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் மதுக்கரை கே.ஜி சாவடி செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டனர்.






