காங்கேயம் அருகே லாரி கார் மோதி விபத்து
திருப்பூர்: காங்கேயம் அடுத்த வீரணம் பாளையம் அருகே, மதுபாட்டில் ஏற்றி வந்த லாரியும் – காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதை காரில் வந்த இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியில் இருந்து மது பாட்டில்கள் சாலையில் சிதறி கிடந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






